நாட்டிலேயே முரட்டு அடிமை யார் தெரியுமா? உதயநிதி கடும் விமர்சனம்
பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல, தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் தரவில்லை.
பட்ஜெட்டை அறிவித்து முடிப்பதற்கு முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்கிறார். இந்தியாவிலேயே எடப்பாடி பழனிசாமிதான் முரட்டு அடிமை.
இவ்வளவு நாள்களாக, பாஜகவின் கிளையாக அதிமுக இருந்தது. ஆனால், தற்போது பாஜகவின் இலையாக மாறிவிட்டது.
இந்தியாவிலேயே 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் மொத்தம் 50 லட்சம் தொண்டர்களைக் கொண்ட ஒரே கட்சி திமுகதான்.
நமது இளைஞர் அணி, மக்கள் பணியையும் கட்சிப் பணியையும் மேற்கொண்டு, மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது.
எவ்விதக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் செயல்படுபவர்களும், எந்தக் கொள்கையும் இல்லாமல் கோஷமிடுபவர்களும் மக்களுக்கு எந்தப் பயனையும் தர மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.