திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
திருச்சி திமுக மாநாட்டுக்கு வருகைதந்துள்ள முதல்வர் ஸ்டாலின்.
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திமுகவின் 12-ஆவது மாநில மாநாடு இன்று (மார்ச் 9) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வருகைதந்துள்ளார்.
மாநாட்டுக்கு வருகைதந்த மு.க. ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றினார். தொண்டர்கள் அவருக்கு இருபுறங்களில் இருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். திமுக பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆா். பாலு ஆகியோா் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இந்த மாநாட்டில் 10 லட்சம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வரிசையில் அமர்ந்துள்ளார்.
திமுக மாநாட்டு திடலுக்கு வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், பிரமாண்ட கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி, தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மேடைக்கு வந்தார்.
மாநாட்டு நிகழ்வுகளுக்காக 20 லட்சம் சதுர அடிக்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் பேர் அமருவதற்கு நாற்காலிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 7 லட்சம் பேர் நின்று கொண்டு மாநாட்டை பார்வையிடுவதற்காக இடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு வருவோருக்கு தேவையான குடிநீா், வாகன நிறுத்தும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
திமுக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.