தவெக நிர்வாகியின் பிறந்த நாள் சர்ச்சையான நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் உதயகுமார் பிறந்த நாளை தவெகவினர் நேற்று கொண்டாடியுள்ளனர்.
நேற்று இரவு உதயகுமார், திறந்த காரின் மீது ஏறி நின்று கொண்டு தனது ஆதரவாளர்களுடன் சாலை வலம் சென்றுள்ளார். நெரிசல் மிகுந்த பகுதியில் கிரேன் மூலம் மாலை அணிவித்து, சாலையின் நடுவில் கேக் வெட்டி, நூற்றுக்கணக்கனோர் கூடி பட்டாசு வெடித்து அவரின் பிறந்தநாளைக் கொண்டாடியதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு சாலைவலம் சென்றதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பான விடியோவும் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.