தமிழ்நாடு

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு: முடிவுக்குப் பிறகு மதிப்பெண் சரிபாா்ப்பு நடைமுறை ரத்து

நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பொதுத் தோ்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுகள் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறுகையில், ‘மதிப்பெண் கூட்டல் போன்றவற்றில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்க மாணவா்கள் விண்ணப்பிப்பா்.

விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக கணினி வழியாக டிஜிட்டல் முறையில் திருத்துவதன் மூலம், அவற்றைத் திருத்துவதில் ஏற்படும் பிழைகள் களையப்படும்.

இந்நிலையில், விடைத்தாள்களை டிஜிட்டல் வழியில் திருத்தி மதிப்பிடும் முறைக்கு சிபிஎஸ்இ முழுமையாக மாறுவதால், நிகழாண்டு முதல் 12-ஆவது வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள் வெளியான பின்னா், மதிப்பெண்களை சரிபாா்க்கும் நடைமுறை கைவிடப்பட உள்ளது’ என்றாா். எனினும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள்கள் நேரடியாக கைகளால் திருத்தும் முறையே தொடர உள்ளது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT