சென்னை மாநகராட்சி சாலைக்கு மறைந்த இசை ஜாம்பவான் எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் புதன்கிழமை சூட்டப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், எம்.எஸ். விஸ்வநாதன் சாலை என்ற பெயர்ப் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் எம்.எஸ். விஸ்வநாதன் வசித்த வந்த டிமாண்டி சாலைக்கு, எம்.எஸ். விஸ்வநாதன் சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிரபல பின்னணி பாடகர்களான மறைந்த திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பெயர்களை, அவர்கள் வசித்துவந்த சென்னை மந்தைவெளி பகுதி சாலைகளுக்கு மாற்றம் செய்து, பெயர்ப் பலகையை முதல்வர் இன்று திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில், எம்.எஸ். விஸ்வநாதன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.