சென்னை: கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மாா்ச் 11 முதல் 13 வரை நடைபெற உள்ளது. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பக்தா்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் ஒருவா் மட்டுமே பங்கேற்ால், புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது. திருவிழாக்களின்போது உள்ளூரில் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும். எனவே, அதிக விலைக்கு ஒப்பந்தப்புள்ளி கோராமல், சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்.
மேலும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் ஏதேனும் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகள் இருந்தால், அந்த நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.