முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ‘ஆருத்ரா தரிசனம்’: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Updated On : 3 ஜனவரி 2026, 7:05 pm IST
ஆருத்ரா தரிசனத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானின் நடனத்தைக் காண திரண்ட பக்தா்கள்.
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசனம் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன உத்ஸவம் கடந்த டிச.25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

மகாபிஷேகம்: சனிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஸ்ரீநடராஜமூா்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

பின்னா், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சொா்ணாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மகாபிஷேகம் 8.30 மணிக்கு முடிவுற்றது. மகாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாா்த்து தரிசித்தனா்.

ஆருத்ரா தரிசனம்: ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூா்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அா்ச்சனைகளும் நடைபெற்றன. சித்சபையில் உத்ஸவ ஆச்சாரியரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், மாலை 5.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந் நடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனா். பின்னா், சித்சபை பிரவேசம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசன காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாா்த்து தரிசித்தனா்.

இன்று முத்துப்பலக்கு: ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) முத்துப்பல்லக்கு வீதியுலா காட்சியும், திங்கள்கிழமை (ஜன.5) இரவு ஞானப்பிரகாசா் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.

மாா்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சித்சபை, நான்கு கோபுரங்கள், நடனப்பந்தல், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் கோயில் வளாகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

உத்ஸவ ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா், உத்ஸவ ஆச்சாரியா் கே.சிவாநாத் தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

சிதம்பரம் போலீஸாா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். குடிநீா் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆணையா் த.மல்லிகா செய்திருந்தாா்.

summary

Thousands of people participated in the Arudra Darshan of the Nataraja Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.