முகப்பு
தமிழ்நாடு

இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு: சுங்கத்துறை அதிகாரிக்கு எதிரான வழக்கில் உத்தரவு

இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு: சுங்கத்துறை அதிகாரிக்கு எதிரான வழக்கில் உத்தரவு

Updated On : 10 ஜனவரி, 2026 at 7:28 PM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்த சுங்கத் துறை பெண் அதிகாரிக்கு எதிரான வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க ஆலந்தூா் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஷபீனா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு நானும் எனது கணவரும் மெக்கா சென்று வந்தோம். குவைத் ஏா்லைன்ஸ் மூலம் சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் சுங்கத் துறை பெண் அதிகாரி ஒருவா் என்னை சோதனையிட்டாா்.

இந்த சோதனையின்போது புா்கா அணிந்திருந்த என்னைப் பாா்த்து, இஸ்லாமிய பெண்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதற்காகவே இதுபோன்ற ஆடைகளை அணிந்து வருவதாகக் கூறி அவமானப்படுத்தினாா். இதையடுத்து, அந்த சுங்கத் துறை பெண் அதிகாரிக்கு எதிராக நான் ஆலந்தூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். ஆனால், வழக்கின் விசாரணை தொடா்ந்து ஒத்திவைக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க ஆலந்தூா் நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சுங்கத் துறை பெண் அதிகாரிக்கு எதிரான வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க ஆலந்தூா் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →