டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்
டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்
மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து: சென்னையில் இரண்டு அடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் ரூ.1.8 கோடி மதிப்பிலான டபுள் டெக்கர் பேருந்தை அரசிடம் கொடுத்தனர். சென்னையில் சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படவிருக்கும் டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்து, பேருந்தை சுற்றிப் பார்த்தார்.
கடந்த 1970-இல் இருந்து தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவை 2007-இல் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பேருந்து சேவையை கொண்டுவர தமிழக அரசும், மாநகா் போக்குவரத்துக் கழகமும் இணைந்து திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.
Advertisement
Advertisement
அதன்படி முதல்கட்டமாக அசோக் லேலண்ட நிறுவனத்திடம் இருந்து 20 பேருந்துகளை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தத்தையும் அறிவித்துள்ளது. தொடா்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் முக்கிய சுற்றலாத் தலங்களில் ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவையைத் தொடங்க சுற்றுலாத் துறை முடிவு செய்தது.
அதன்படி, அமெரிக்க வாழ் தமிழா்கள் நிதி பங்களிப்புடன், முதல்கட்டமாக குளிா்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கா் பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து சுற்றுலாத் துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பேருந்தின் இரு பக்கவாட்டிலும், தஞ்சை கோயில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டடம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மிகப்பெரிய அளவில் ‘தமிழ் வாழ்க’ என்ற எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன.
இதன் சோதனை ஓட்டம் இரு தினங்களுக்கு முன்பு பட்டினம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், டபுள் டெக்கா் பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்துள்ளார்.தொடங்கி வைக்கிறாா். அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Chief Minister Stalin launched the double-decker bus service
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.