ஒரே காரில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய விஜய், ஆதவ் அர்ஜுனா படம் - எக்ஸ்
தமிழ்நாடு

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

இரண்டாவது நாளாக மீண்டும் நாளை (ஜன. 13) காலை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் ஆஜராகவுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட முதல் நாள் விசாரணை இன்று (ஜன. 12) நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், இரண்டாவது நாளாக நாளை (ஜன. 13) காலை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் இருந்து இன்று காலை தில்லி விமான நிலையம் சென்ற விஜய், அங்கிருந்து நேரடியாக லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27 ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இந்த வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என். ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினா்.

இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இதன்படி, சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை விஜய் தில்லி புறப்பட்டார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உட்பட 6 பேர் தில்லி சென்றனர் .

விமான நிலையத்தில் இருந்து நேரடியாக சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அங்கு அவரிடம் சுமார் 7 மணிநேரம் விசாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், நாளை மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகவுள்ளார்.

சிபிஐ விசாரணை முடிந்து இன்று இரவு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று இரவு தில்லியிலேயே விஜய் தங்கியிருந்து நாளை சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகவுள்ளார்.

delhi CBI interrogation of TVK Vijay concludes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் கோரிக்கை ஏற்பு: சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

SCROLL FOR NEXT