புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்துள்ளது பற்றி...
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 4,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இதற்காக ரூ. 140 கோடி நிதி ஒதுக்க ஆளுநரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நிதிச்சுமை காரணமாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து இன்று பிற்பகல் ஆளுநரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. ஆனால், பொங்கல் முடிந்த பிறகு ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ. 3,000 வரவு வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Puducherry pongal amount announced by cm rangasamy for ration card holders
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.