திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின். (கோப்புப்படம்)
தமிழ்நாடு

தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 வாக்குறுதிகள்!

திருவள்ளுவர் நாளில் முதல்வர் ஸ்டாலின் 4 வாக்குறுதிகள் அளித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளுவர் நாளில் முதல்வர் ஸ்டாலின் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்!

அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு - திருவள்ளுவர்

  • சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.

  • வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.

  • இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.

  • தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 நாள்களில் ரூ.200 கோடி வசூல்..! சிரஞ்சீவிக்கு கம்பேக் கொடுத்த அனில் ரவிபுடி!

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி!

ஜீவாதான் பொங்கல் வெற்றியாளர்..! மிகுந்த வரவேற்பில் தலைவர் தம்பி தலைமையில்!

DINAMANI வார ராசிபலன்! | ஜன.18 முதல் 24 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

4 நாள்களுக்குப் பின் தங்கம் விலை குறைவு.. இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT