பதிவுத்துறை இணையதளம் இயங்காது! முன்கூட்டியே பயன்படுத்த அறிவுறுத்தல்!
இணையதள சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்.
பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்துக்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் இன்று(ஜன. 21) இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 11 மணி வரை பதிவுத்துறை இணையதளம்(Citizen Portal) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
பதிவுத்துறை இணையதளம் https://tnreginet.gov.in மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்துக்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் ஜன. 21 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணியிலிருந்து ஜன. 22 ஆம் தேதி வரை (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை பதிவுத்துறையின் இணையதளம்(Citizen Portal) செயல்படாது.
இருப்பினும் மேற்கூறிய இரண்டு நாள்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.
ஜன. 22-ல் பத்திரம் பதிவு செய்ய உள்ள பொதுமக்கள் மேற்படி குறிப்பிட்ட நேரத்தில் இணையதளம் (Citizen Portal) செயல்படாது என்பதைக் கருத்தில் கொண்டு இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் எடுப்பது, ஆன்லைன் கட்டணம் செலுத்துவது, வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல்களை பெறுவது போன்ற பதிவுத்துறையின் இணையதள சேவைகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
The registration department advises to register in advance to use online services.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.