முகப்பு
தமிழ்நாடு

பதிவுத்துறை இணையதளம் இயங்காது! முன்கூட்டியே பயன்படுத்த அறிவுறுத்தல்!

இணையதள சேவைகளை முன்கூட்டியே பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்.

Updated On : 21 ஜனவரி, 2026 at 12:20 PM
தமிழக அரசு தலைமைச் செயலகம்
பகிர்:

பராமரிப்பு மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்துக்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் இன்று(ஜன. 21) இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 11 மணி வரை பதிவுத்துறை இணையதளம்(Citizen Portal) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

பதிவுத்துறை இணையதளம் https://tnreginet.gov.in மற்றும் ஸ்டார் 3.0 திட்டத்துக்கு தரமேம்பாடு செய்யப்பட இருப்பதால் ஜன. 21 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணியிலிருந்து ஜன. 22 ஆம் தேதி வரை (வியாழக்கிழமை) காலை 11 மணிவரை பதிவுத்துறையின் இணையதளம்(Citizen Portal) செயல்படாது.

இருப்பினும் மேற்கூறிய இரண்டு நாள்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் வழக்கம் போல் செயல்படும்.

ஜன. 22-ல் பத்திரம் பதிவு செய்ய உள்ள பொதுமக்கள் மேற்படி குறிப்பிட்ட நேரத்தில் இணையதளம் (Citizen Portal) செயல்படாது என்பதைக் கருத்தில் கொண்டு இன்று இரவு 7 மணிக்குள் டோக்கன் எடுப்பது, ஆன்லைன் கட்டணம் செலுத்துவது, வில்லங்கச் சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல்களை பெறுவது போன்ற பதிவுத்துறையின் இணையதள சேவைகளை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

summary

The registration department advises to register in advance to use online services.

முழு கட்டுரையைப் படிக்க →