FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து!

கோவையில் உதிரிபாகக் கடையில் நடந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக...

கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து.
பகிர்:

கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு டயர்கள் உள்ளிட்ட பொருள்கள் வெடித்து, குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள பட்டேல் ரோடு, பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்து உள்ள இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீப்பற்றி எரிய தொடங்கியது.

உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே நெருக்கமான குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியது.

Advertisement

Advertisement

​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், குறுகலான வீதிகள் மற்றும் கொழுந்து விட்டு எரியும் தீயினால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.

இந்நிலைமையில், தீ விபத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்களும் தீயணைப்புத் துறையுடன் கைக்கோர்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உதிரிபாகக் கடையில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

summary

A massive fire broke out at a spare parts shop in Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments