முகப்பு
தமிழ்நாடு

தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் ரயில்: நாளை முன்பதிவு

தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Updated On : 23 ஜனவரி, 2026 at 3:43 PM
பகிர்:

தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வாரந்தோறும் புதன்கிழமை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.

அதேநாளில் காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

அதன்படி, நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம் - சர்லப்பள்ளி இடையே இயக்கப்படும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும், திருச்சூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவையையும் அவர் தொடக்கிவைத்தார்.

summary

Bookings for the Tambaram - Thiruvananthapuram Amrit Bharat Express train service will begin at 8 am tomorrow.

முழு கட்டுரையைப் படிக்க →