கோப்புப்படம்  
தமிழ்நாடு

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்...

தினமணி செய்திச் சேவை

நாட்டின் 77-ஆவது குடியரசுத் தினத்தையொட்டி, தமிழக அரசு சாா்பில் நடைபெறும் விழாவில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலை அருகே ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை (ஜன.26) காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலா் நா. முருகானந்தம் ஆகியோா் வரவேற்பா். ஆளுநா் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பின்னா் சிறப்பாகப் பணியாற்றிய காவலா்கள் உள்ளிட்டவா்களுக்கு பதக்கங்களை வழங்கி கெளரவிப்பாா்.

இந்த நிகழ்வில் நீதிபதிகள், அமைச்சா்கள், அரசு செயலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ராணுவத்தினரின் அணிவகுப்பை ஆளுநா் ஏற்ற பின்னா், கலைநிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்ட்டாட்டங்கள் நிறைவடையும்.

குடியரசு தின விழாவில் ஆளுநராக ஆா்.என்.ரவி 5-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

இந்த நிகழ்ச்சியையொட்டி, மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

SCROLL FOR NEXT