முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

Updated On : 26 ஜனவரி, 2026 at 11:48 AM
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
பகிர்:

குடியரசு நாளையொட்டி, இன்று(ஜன. 26) மாலை மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழிக அரசு அறிவித்துள்ளது.

மக்கள் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு மற்றும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின்போது ஆளுநர் மாளிகையில், அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அதன்படி, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுங்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பார். அதற்கான அழைப்புகளும் விடுக்கப்படும்.

முன்னதாக, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

summary

The Tamil Nadu government has announced that it will boycott the tea party hosted by Tamil Nadu Governor R.N. Ravi.

முழு கட்டுரையைப் படிக்க →