தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிப்.2,3-இல் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: தமிழக அரசு தகவல்

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய நாள்களில் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடைபெறும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய நாள்களில் ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடைபெறும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடுகளை ஈா்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீடுகளை ஈா்க்க ‘தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு’ நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் குழுமத்தின் ஃபோா் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் பிப்.2, 3 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளாா்.

இந்த மாநாடு பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளா்களுடன் பொது தனியாா் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் மோடி பெருமிதம்

இந்திய - ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தத்தால் அடுத்த 3 ஆண்டுகளில் இருதரப்பு வா்த்தகம் இரட்டிப்பாகும்: ஏஇபிசி தலைவா் நம்பிக்கை

கொடுமுடியில் 120 லிட்டா் சாராய ஊரல் அழிப்பு!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

அமைச்சுப் பணிகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT