கொலை 
தமிழ்நாடு

வேதாரண்யம் : தந்தை அடித்துக் கொலை; மகன் கைது

வேதாரண்யத்தில் மது அருந்த பணம்கேட்டு, தந்தையைக் கொலைசெய்த மகன் கைது

இணையதளச் செய்திப் பிரிவு

வேதாரண்யத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செட்டிபுலம் கிராமத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ரவீந்திரன் (50). இவரது மகன் அழகேசன் (22) மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

உயிரிழந்த ரவீந்திரன்

இந்த நிலையில், மது அருந்துவதற்கு தனது தாயாரிடம் பணம்கேட்டு, அழகேசன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இருவருக்குமான தகராறை தீர்த்துவைக்க முயன்ற தந்தை ரவீந்திரனை அழகேசன் செங்கல்லால் தாக்கியதில், ரவீந்திரன் நிகழ்விடத்திலேயே பலியானார்.

இந்தச் சம்பவத்தினையடுத்து, அழகேசனை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vedaranyam: Father beaten to death; son arrested.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளையராஜாவிடம் விருது பெற்ற பாக்யஸ்ரீ போர்ஸ்!

பட்ஜெட்: சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது!

திமுக அரசு ஒரேயொரு குடும்பத்துக்கானது மட்டுமே: நயினார் நாகேந்திரன்

2 ஆண்டுகளுக்குப் பிறகு காஸா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

கம்பத்தில் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!

SCROLL FOR NEXT