முகப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு.

தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு.

Updated On : 2 மார்ச், 2026 at 12:55 PM
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், வருகிற மார்ச் 23 ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்தவர் வணிகர் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் இருவரும் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை, பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கைப்பேசி கடையை தாமதமாக அடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காவல் துறையினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்று தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையில், சிபிஐ தரப்பு வழக்குரைஞர் விஜயன் தனது இறுதி வாதங்களை முன்வைத்துவிட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதா், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை ஆகியோர் தரப்பில் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. காவலர்களின் தரப்பிலும் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

அனைத்துத் தரப்பினரின் இறுதி வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற மார்ச் 23 ஆம் தேதி மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கவுள்ளார்.

summary

The Madurai District Court will deliver its verdict in the Sathankulam father-son murder case on March 23rd.

முழு கட்டுரையைப் படிக்க →