தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது குறித்து...
கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
6 ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக எல்லைக்குட்பட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததாக புகாரில் கூறப்படுகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, தமிழக எல்லைக்குள் நுழைந்து கற்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்தது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டத்திற்குரியது எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lankan Navy attacks Tamil Nadu fishermen
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.