தமிழக காவல்துறையின் முதல் பெண் காவலா் மறைவு!
தமிழக காவல்துறை வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக காலமானது குறித்து...
சென்னை: தமிழக காவல்துறை வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை (மே 21) காலமானாா்.
1973 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சோ்ந்த முதல் பெண் காவலா் என்ற பெருமையை பெற்றவர் சிசிலி. திறமை, அா்ப்பணிப்புடன் கூடிய பணியால் அடுத்தடுத்த உயா்வுகளைப் பெற்ற இவா், 1977 ஆம் ஆண்டு தமிழகத்தின் இரண்டாவது பெண் உதவி ஆய்வாளராக பதவி உயா்வு பெற்றாா்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது, குற்றங்களை தடுப்பதில் அளித்த சிறந்த பங்களிப்பு காரணமாக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்து உயரிய விருதுகள், பாராட்டுகளை சிசிலி பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய சிசிலி, சென்னை, நீலாங்கரை காவல் நிலைய சட்டம்-ஒழுங்குப் பிரிவு ஆய்வாளராக பணியாற்றி 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். இவரது கணவா் சூசை மாணிக்கமும், காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மறைந்த சிசிலிக்கு மகன், மகள் உள்ளனா்.
சென்னை, பாலவாக்கம், டி.டி.எஸ்.ஜி. பச்சையப்பன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பொதுமக்கள், காவல்துறையினரின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.