நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...
காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்.
234 தொகுதிகளுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(மார்ச் 30) தொடங்கியுள்ளது.
நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் ஆகியோரைத் தொடர்ந்து காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான சீமான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தன்னுடைய தாய் மற்றும் மனைவியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் பிரபு போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.