முகப்பு
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கனமழையால் வெள்ளியங்கிரி மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலையில்... - கோப்புப் படம்
பகிர்:

கனமழை காரணமாக வெள்ளியங்கிரி மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 7 மலைகளைக் கடந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்க ஆலயம் அமைந்து உள்ளது.

தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை, சிவ பக்தர்களுக்கான ஆன்மிக சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.

Advertisement

சிவ பக்தர்கள் ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி ஆண்டவர் ஆலயத்தில் அடிவாரத்தில் தரிசிக்கும் நிலையில், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை, மலை ஏறி சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்க, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வனத் துறையினர் பக்தர்களுக்கு அனுமதி அளித்து வருகின்றனர்.

கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிவ பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கத்தைத் தரிசிக்கின்றனர். அதிகாலை உதிக்கும் சூரியனை சிவ பக்தர்கள் பரவசத்துடன் தரிசிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தற்காலிகமாக மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

summary

Velliangiri Trekking: Temporarily Suspended Starting Today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.