திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன்
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானத்தை கொண்டுவந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"நடந்து முடிந்த தேர்தல் மாயாஜாலம் போன்றதுதான். எனினும் திமுகவை அசைக்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். திமுக கூட்டணி கட்சிகள், வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்ததால்தான் அவர்(விஜய்) முதல்வராகியிருக்கிறார். ஆனால், அவர் தேவையற்ற விஷயங்களைப் பேசினால் அவரைத் தோற்கடிக்கும் அனைத்து முயற்சிகளையும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் செய்யும்.
Advertisement
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்துள்ளோம்.
மு.க. ஸ்டாலின், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த நடிகரின் முகத்தில் கரியைப் பூச வேண்டும். தேர்தல் காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். லாட்டரி தொழிலை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனாநினைக்கிறார்" என்றார்.