முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய் குறித்து அவதூறு! அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு!

அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பது பற்றி...

Updated On : 1 ஜூலை 2026, 12:45 pm IST
அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

திருச்செந்தூரில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.

இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகப் பரவிய நிலையில், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தவெக நகரச் செயலர் செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாக பேசுவது, மோதலை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கைதாவதை தவிர்க்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

summary

Defamation regarding Chief Minister Vijay - Anitha Radhakrishnan files petition seeking anticipatory bail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments