திமுகவினர் யாரைக் கண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது: அனிதா ராதாகிருஷ்ணன்
நெல்லை பாளையங்கோட்டையில் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி பற்றி...
திமுகவினர் யாரைக் கண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லை பாளையங்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில், அப்போது பேசிய அவர் எழுதிக் கொடுத்து மேடைக்கு மேடை பேசும் தேவை எங்களுக்கு கிடையாது. முதல்வர் எழுதி கொடுத்ததை பார்த்து மேடையில் பேசி வருகிறார்.
பேசுவது மறந்தவுடன் அருகில் உள்ள பேப்பரை எடுத்து பார்த்து படிக்கிறார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களின் செயலையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவு விரைவில் வரும்.
Advertisement
Advertisement
திமுகவைச் சார்ந்தவர்கள் எந்த காரணத்தைக் கொண்டு ஓடி ஒளிபவர்கள் கிடையாது. கரூர் சம்பவத்தில் 42 பேர் இறந்த நிலையில் திருச்சியில் இருந்து முதல்வர் ஓடியதை அனைவரும் பார்த்தார்கள். அப்படி ஓடுபவர்கள் திமுகவினராக இருக்க மாட்டார்கள்.
திமுகவினர் யாரைக் கண்டும் ஓடுபவர்கள் கிடையாது. சம்பவ இடத்தில் நின்று பணியாற்றும் தலைவர்களாக தான் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
DMK cadre will never run away and hide from anyone, says Former Minister Anitha Radhakrishnan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.