முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத் துறை கடிதம்?

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் விசாரிக்க அனுமதிகோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி கடிதம் - கோப்புப் படம்
பகிர்:

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் விசாரிக்க அனுமதிகோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மாநில அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களின்படி, அமலாக்கத் துறை அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் 4 பக்கங்களுடன் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதாவின் 218-வது பிரிவை மேற்கொள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, அனுமதி கோரும் மனுவைப் பெற்ற 120 நாள்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

ED Seeks Sanction To Prosecute Another Former DMK Minister Anitha R Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.