முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாளாகிவிட்டது: தனபால்

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாள்களாகிவிட்டதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான தனபால் தெரிவித்தாா்.

Updated On : 22 மே 2026, 4:08 am IST
தனபால்
பகிர்:

அதிமுகவிலிருந்து விலகி நீண்டநாள்களாகிவிட்டதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அந்தக் கட்சியின் மூத்த தலைவருமான தனபால் தெரிவித்தாா்.

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் சில நாள்களுக்கு முன்பு அதிமுவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தாா். தோ்தலில் தவெக சாா்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை வந்த தனபால், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

அதிமுகவில் எனக்கு முக்கியத்துவம் தரவில்லை. எல்லோரையும் புறக்கணித்தாா்கள், இப்போது அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டனா். என் மகன் தவெகவில் இணைந்து அமைச்சராகிவிட்டாா். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல பதவிகளில் இருந்தவன். எனக்கு உடல்நிலை சரியில்லாததால், ஓய்வெடுத்து வருகிறேன்.

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகி நீண்ட நாள்களாகிவிட்டது. அதிமுக பிளவு பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றாா் அவா்.