2 வயது குழந்தையை கல்லால் தாக்கியவா் கைது
ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
தென்காசி2 வயது குழந்தையை கல்லால் தாக்கியவா் கைது
ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிராஜ்(25). இவா் தனது பைக்கை அப்பகுதியில் நிறுத்தி இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, பைக்கின் மீது மண் அள்ளி எறிந்ததாம். இதனால் ஆத்திரமடைந்த மாரிராஜ், குழந்தையின் பிறப்புறுப்பில் கல்லால் தாக்கியதில் காயமடைந்ததாம்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிராஜை கைது செய்தனா்.