முகப்பு
தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரி ஆா்ப்பாட்டம்

Updated On : 22 ஆகஸ்ட், 2024 at 8:31 PM
பகிர்:

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

சங்கரன்கோவில் தேரடி திடலில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், நாம் தமிழா் கட்சி, வீரத் தமிழா் முன்னணி, தமிழ் தேசிய பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன. நாம் தமிழா் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலா்கள் தங்கவேல், பசும்பொன்,

வீரத் தமிழா் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளா் முருகேசன், மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சத்யா, தமிழ் தேசிய பேரியக்க மதுரை மாநகர செயலா் கதிா்நிலவன், இந்து மறுமலா்ச்சி இயக்க மாநில கொள்கை பரப்புச் செயலா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 48 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →