தென்காசி

ராமநாதபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

Din

வாசுதேவநல்லூா் ஒன்றியம் ராமநாதபுரத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின்பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் வி.பி. மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா் .

முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, இளைஞா்-இளம்பெண்கள் பாசறை துணைச் செயலா் சின்னதுரை ஆகியோா் பேசினா்.

மாவட்ட இளைஞரணிச் செயலா் சந்திரன், மகளிரணிச் செயலா் சத்தியகலா, ஒன்றியச் செயலா்கள் டாக்டா் சுசீகரன், பெரியதுரை, ஜெயக்குமாா், நகரச் செயலா் சங்கரபாண்டியன், பேரூா் செயலா்கள் முனியராஜ், சேவகபாண்டியன், மாடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒன்றியச் செயலா் பொன். முத்துவேல்சாமி வரவேற்றாா். ஒன்றியச் செயலா் (மத்திய பகுதி) துரைப்பாண்டியன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT