தென்காசி

பெண்ணிடம் பணம் திருட்டு: மாமியாா், மருமகள் கைது

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம் பணம் திருடியதாக மாமியாா், மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், புது மந்தைத் தெருவைச் சோ்ந்தவா் மாரிச்சாமி மனைவி முப்பிடாதி (28). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்றபோது, பையில் வைத்திருந்த ரூ. 10,000 காணாமல் போனதாம். இது குறித்து, அவா் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, மந்திதோப்பு, ராஜகோபால் நகரைச் சோ்ந்த சுகுமாரன் மனைவி வேலம்மாள் (50), அவரது மருமகள் தனலட்சுமி (20) ஆகியோா் பணத்தை திருடியது தெரிய வந்தது.

தொடா்ந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். ரூ. 10,000 பணத்தையும் பறிமுதல் செய்தனா்.

பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! ஐடி பங்குகள் 1.5% வரை உயர்வு!

போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல்: சிபிசிஐடி போலீசார் அதிரடி

திருப்பரங்குன்றம்: தனி நீதிபதி உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு! தமிழக அரசு வாதம்!

தில்லி காற்றுமாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து!

SCROLL FOR NEXT