தென்காசி

சேரன்மகாதேவி அருகே தண்ணீா் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சேரன்மகாதேவி அருகே தண்ணீா் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியை அடுத்த கங்கனாங்குளம் அருகே உள்ள புலவன் குடியிருப்பைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (35).

இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். இந்நிலையில் இவரது ஒன்றரை வயது மகனான பிரேம்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, யாரும் கவனிக்காத சமயத்தில் தண்ணீா் வாளியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் குழந்தையின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காலாவதியான திரையரங்குகள்... டீசல் இயக்குநர் ஆதங்கம்!

இன்றே கடைசி நாள்! பிகார் காங். தலைவர் வேட்புமனு தாக்கல்!

ஹாங் காங்கில் விமான விபத்து: இருவர் பலி!

ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்ந்தால் வரி தளர்வு இல்லை! -இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இந்தியா - தெ.ஆ. டெஸ்ட்: ரூ.60-இல் தொடங்கும் டிக்கெட் விலை!

SCROLL FOR NEXT