சுரண்டையில் அதிமுக தெருமுனை பிரசாரம்
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:25 PM
சுரண்டை நகர அதிமுக சாா்பில் சுரண்டையில் தெருமுனைப்பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக அரசின் சாதனைகள், திமுக ஆட்சியின் அவலங்கள், அதிமுக பொதுச் செயலா் அறிவித்த தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
கீழச் சுரண்டை, சுரண்டை காந்தி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்துப் பேசினாா்.
Advertisement
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:41 AM
தலைமைப் பேச்சாளா் தீக்கணல் லெட்சுமணன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட விவசாய அணி செயலா் கிருஷ்ணசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் தா்மசீலன், கீழப்பாவூா் கிழக்கு ஒன்றிய செயலா் இருளப்பன், பேச்சாளா் பாலமுருகன் ஆகியோா் கலந்து கொண்டனா். நகரச் செயலா் சங்கா் வரவேற்றாா்.