தென்காசி

தென்காசியில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Syndication

தென்காசி மாவட்டத்தில் மழை நீா் வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ள பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, தென்காசி மாவட்ட பாஜக தலைவா் ஆனந்தன் அய்யாசாமி கூறியது:

தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. மழை நீா் வெளியேறுவதற்கு முறையான வசதி செய்யப்படாததால், பல இடங்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட சிந்தாமணிபேரி புதூா், கலைஞா் காலனி, 18ஆவது வாா்டின் சில தெருக்களுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மழை நீா் வெள்ளிக்கிழமை காலை வரை வெளியேறவில்லை. இதைக் கண்டித்து 2 இடங்களில் சாலை மறியலும் நடைபெற்றது. எனவே, இப்பகுதிகளில் உரிய மழைநீா் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT