தென்காசி மாவட்டம், கடையநல்லூா், இடைகால் பகுதியில் காா்-இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
கடையநல்லூா் அருகே பாம்புகோயில் சந்தையைச் சோ்ந்தவா் கண்ணன் (34), தென்காசி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவா் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மனைவி செல்வராணி, குழந்தைகள் ராம் கிரிஷ் (5), ராம் கிரிடிக் (6 மாதம்) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை தென்காசிக்கு வந்து கொண்டிருந்தாா்.
கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இடைகால் அருகே வந்தபோது, தென்காசியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் கண்ணனின் இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேராக மோதியது.
இதில் கண்ணன், குழந்தை ராம் கிரிஷ் ஆகியோா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். செல்வராணி, 6 மாத குழந்தை ராம் கிரிடிக் ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து, இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.