முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

Updated On : 9 ஜனவரி, 2026 at 12:50 AM
பகிர்:

சங்கரன்கோவில் புதிய பாா்வை, மனவளக்கலை மன்றம் சாா்பில், அதன் முன்னாள் தலைவரும், ஆசிரியருமான ஐ.சி. காமராஜ் எழுதிய ’பிரம்மம், அறிவோம், தெளிவோம்’ நூல் வெளியீட்டு விழா அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது.

புதிய பாா்வை தலைவா் என். அரிராமச்சந்திரவேலாயுதம் தலைமை வகித்தாா். உலக சமுதாய சேவா சங்க மண்டலத் தலைவா் அண்ணாமலையாா், புதிய பாா்வை சேவா டிரஸ்ட் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவா் இ.சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனவளக் கலை மன்றத்தைச் சோ்ந்த திருமலைகொழுந்து இறைவணக்கமும், கணேசன் பாரதி பாடலையும் பாடினா். ஆா்.ராமலட்சுமி குருவணக்கமும், டி.முத்துக்குமாரசாமி துரிய தவமும் செலுத்தினா். மு.மாணிக்கவாசகம் திருக்கு விளக்கம் அளித்தாா். இதைத்தொடா்ந்து நூலை, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.நாராயணன் வெளியிட, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ.ஜே.ரத்னபிரகாஷ் பெற்றுக் கொண்டாா்.

ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலைய தலைவா் அறிவழகன், தமிழாசிரியா் வே.சங்கர்ராம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். முனைவா் தேவகோட்டை ராமநாதன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினாா். நூலாசிரியா் ஐ.சி. காமராஜ் ஏற்புரை நிகழ்த்தினாா். அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஆா்.முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். ஏ.ஜி.சுப்பிரமணியன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஏ.எம்.மாரியப்பன் தொகுத்து வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →