ஊத்துமலை அருளப்பா் ஆலயத் திருவிழா
பாளையங்கோட்டை மறை மாவட்டம், ஊத்துமலை, புனித அருளப்பா் ஆலய 80ஆம் ஆண்டு பங்குத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இத்திருவிழா ஜன. 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அருளப்பா் எழுந்தருளினாா். இதில் திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம், கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை ஊத்துமலை பங்குத்தந்தை அருள் மரியநாதன், களப்பணியாளா் சூரியா, அருள்சகோதரிகள், அன்பிய உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.