முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 3 மே, 2026 at 5:19 AM
பகிர்:

ஆலங்குளம் உள்கோட்ட காவல் துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு, ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலை வகித்தாா். உள்கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

பழைய காவல் நிலையம் தொடங்கி, புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.

Advertisement