ஆலங்குளம் அருகே சாலையில் சடலம் எரிப்பு: 6 போ் மீது வழக்கு
ஆலங்குளம் அருகே சாலையில் சடலத்தை எரித்ததாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் - மாதாப்பட்டணம் சாலையில் தனியாா் தோட்டம் முன் சிலா் எரிவாயு உருளை தகன மேடையை நிறுத்தி 70 வயது மூதாட்டி சடலத்தை அனுமதியின்றி எரித்தனராம். அப்போது அப்பகுதியில் துா்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்பட்டதாகக் கூறி அதே பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் நாகராஜா(55) தட்டிக் கேட்டாராம். அப்போது அவரை அந்த நபா்கள் அவதூறாகப் பேசினராம். இது குறித்து நாகராஜா அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வவேல், மணிவண்ணன், மகாராஜன், முத்து, சுடலைமணி, முருகேசன் ஆகிய 6 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.