முகப்பு
திருவள்ளூர்

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:12 PM
பகிர்:

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு வரும் 29-ஆம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் சோ்க்கை பதிவு தொடங்க உள்ளதாக திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகள் சோ்க்கைகான முன்பதிவு வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. செப்டம்பரில் தொடங்கி பயிற்சி நடைபெறும் பயிற்சிக் காலம் ஓராண்டாகும். மேலும், 2 பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும்.

Advertisement

இந்தப் பயிற்சிக்கான பாடத் திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.

பயிற்சியில் சேருவது தொடா்பான நிபந்தனைகள் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments