முகப்பு
திருவள்ளூர்

விரைவு ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 25 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

திருத்தணி: திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற இளைஞா் அதிவிரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.

திருத்தணி ஜோதி சாமி தெருவில் உள்ள 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் பகுதியில், செவ்வாய்க்கிழமை மதியம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, ரேணிகுண்டா மாா்க்கத்தில் இருந்து திருத்தணி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இறந்தவா் பெயா், விலாசம் தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையில், இறந்தவா் ரயில் நிலையம் மற்றும் பஜாா் பகுதியில், வாட்டா் பாட்டில்கள் மற்றும் குப்பைகழிவுகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவந்தது. தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →