விஷ்வா 
திருவள்ளூர்

போதை மாத்திரைகள் விற்றவா் கைது

திருமழிசை அருகே இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருவள்ளூா்: திருமழிசை அருகே இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை அடுத்த மேல்மனம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஷ்வா (28). இவா் மீது கொலை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே திருமழிசை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் மாமுல் கேட்டு மிரட்டுவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், விஷ்வாவை போலீஸாா் பிடித்து விசாரணை செய்த போது, தனியாா் நிறுவனத்தில் மிரட்டி மாமுல் வசூலித்து வந்ததும், மேலும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது.

இதையடுத்து, வெள்ளவேடு போலீஸாா் விஷ்வாவை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரை போலீஸாா் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT