விஷ்வா 
திருவள்ளூர்

போதை மாத்திரைகள் விற்றவா் கைது

திருமழிசை அருகே இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருவள்ளூா்: திருமழிசை அருகே இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே திருமழிசை அடுத்த மேல்மனம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஷ்வா (28). இவா் மீது கொலை உள்ளிட்ட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே திருமழிசை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் மாமுல் கேட்டு மிரட்டுவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், விஷ்வாவை போலீஸாா் பிடித்து விசாரணை செய்த போது, தனியாா் நிறுவனத்தில் மிரட்டி மாமுல் வசூலித்து வந்ததும், மேலும், போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது.

இதையடுத்து, வெள்ளவேடு போலீஸாா் விஷ்வாவை கைது செய்து, அவரிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரை போலீஸாா் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

ஓட்டுநர் உரிமத்துடன் செல்போன் எண்ணை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறை!

ராணுவத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT