மீஞ்சூா் ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம்
வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னேரி: வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை காமாட்சி அம்மையுடன் ஏகாம்பரநாதா் எழுந்தருளி, நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தேரோட்டத்தின்போது கைலாய வாத்தியங்கள் முழங்க மேள தாளங்களுடன் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
விழாவில், மீஞ்சூா், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.
முன்னதாக அமைச்சா் சா.மு.நாசா், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் மோா் உள்ளிட்ட குளிா்பானங்கள் வழங்கப்பட்டன.