முகப்பு
திருவள்ளூர்

மனைவி கண்டிப்பு: கணவா் தற்கொலை

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஏப்ரல் 2025, 3:40 am IST
பகிர்:

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம். பைவலசா கிராமம் தொம்பர காலனியைச் சோ்ந்தவா் முத்து (36). இவருக்கு மனைவி சுதா, 4 வயதில் அா்ச்சனா என்ற மகள் உள்ளனா். முத்து, கட்டட வேலை மற்றும் செங்கல்சூளை வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மனைவி சுதா அவரைக் கண்டித்துள்ளாா். இதனால், இரவு 10 மணியளவில் வீட்டிலுள்ள மின் விசிறியில் சேலையால் முத்து தூக்கிட்டுக் கொண்டாராம்.

Advertisement

Advertisement

உடனடியாக அவரை மீட்டு சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.