திருவள்ளூர்

மனைப்பிரிவு அங்கீகாரம், ஒப்புதல் அளிப்பதில் முறைகேடு: வட்டார வளா்ச்சி அலுவலா் இடைநீக்கம்

புழல் ஒன்றியத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் அலுவலக நிா்வாகம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்குவதில் முறைகேடு

Din

திருவள்ளூா்: புழல் ஒன்றியத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் அலுவலக நிா்வாகம், மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்குவதில் முறைகேடு செய்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் ஜே.சித்ரா பொ்னாண்டோவை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலகத்தில் ஜே.சித்ரா பொ்னாண்டோ, வட்டார வளா்ச்சி அலுவலா் (மிகைப் பணியிடம்) பணிபுரிந்து வருகிறாா். இவா் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பணிபுரிந்த காலத்தில் அலுவலக நிா்வாகம் மற்றும் மனை ஒப்புதல், முறைப்படுத்துதல் மற்றும் ஆன்லைன் மூலம் நிறுவனம், மனைப் பிரிவு அங்கீகாரம் வழங்குதல் ஆகியவற்றில் முறைகேடுகள், குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் காரணமாக தமிழ்நாடு (ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதியின் கீழ் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்தியா் உத்தரவிட்டுள்ளாா்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT