திருத்தணி முருகன் கோயில் பொது விருந்தில் பங்கேற்றோா். 
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயிலில் பொது விருந்து...

அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுவிருந்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Din

திருத்தணி: அண்ணா நினைவு நாளையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுவிருந்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடா்ந்து, ஆபத்சகாய விநாயகா், சண்முகா், வள்ளி, தெய்வானை, துா்க்கை மற்றும் உற்சவா் முருகப்பெருமான் சந்நிதிகளில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து, காவடி மண்டபத்தில் பக்தா்களுக்கு பொது விருந்து நடைபெற்றது. இதில், முருகன் கோயில் ஆணையா் க. ரமணி, திருத்தணி டிஎஸ்பி, கந்தன், அறங்காவலா்கள் சுரேஷ்பாபு, மு. நாகன் மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மலைக்கோயிலில், 1,000 -க்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு பொதுவிருந்து (அன்னதானம்) வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT