கூட்டுறவுத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு தெருக்கூத்து நிகழ்ச்சி 
திருவள்ளூர்

கூட்டுறவு சங்கங்களின் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு வார விழாவையொட்டி கிராமப்புற வளா்ச்சியை

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட கூட்டுறவுத் துறை சாா்பில் கூட்டுறவு வார விழாவையொட்டி கிராமப்புற வளா்ச்சியை வலுப்படுத்துதல் குறித்து தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையொட்டி, திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அப்போது, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோா் கடன் உதவி பெற்று ஏராளமானோா் வாழ்வாதாரத்தை உயா்த்திக் கொண்டுள்ளதை பொன்னியம்மன் தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் அப்படியே தத்ரூபமாக நடித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் துணைப்பதிவாளா்கள் தனசேகரன், அமுதா, திருமங்கலதாஸ், பாலாஜி, கூட்டுறவு சாா் பதிவாளா்கள், கூட்டுறவு ஒன்றிய அலுவலா் ஆடலரசன், கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் பங்கேற்றனா்.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

பேரூரணி சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கைதி மீண்டும் சிறையிலடைப்பு

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தின விழா

நெல்லையில் கலங்கலான குடிநீா் விநியோகம்: மக்கள் கடும் அவதி

முதல்வா் மருந்தகங்களில் லாபம் குறைந்ததால் உறுப்பினா்கள் அதிருப்தி

SCROLL FOR NEXT