வணிகம்

பெடரல் வங்கி லாபம் இரு மடங்கு உயர்வு

தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் வங்கி லாபம் மார்ச் காலாண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.

DIN

தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் வங்கி லாபம் மார்ச் காலாண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளது.
 இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
 வட்டி வருமானம் அதிகரிப்பு, வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு பெருமளவு குறைந்தது ஆகிய காரணங்களால் பெடரல் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.381.51 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.144.99 கோடியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமாகும்.
 வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,682 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,444 கோடியானது.
 வாராக் கடன்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை ரூ.371.53 கோடியிலிருந்து பாதியாக குறைந்து ரூ.177.76 கோடியாக இருந்தது.
 வட்டி வருவாய் ரூ.1,951 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.2,413 கோடியானது.
 கடந்த 2018-19 முழு நிதியாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.878.85 கோடியிலிருந்து 41.5 சதவீதம் அதிகரித்து ரூ.1,243.89 கோடியாக இருந்தது என மும்பை பங்குச் சந்தையிடம் பெடரல் வங்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT